131
புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரணையில் பரஹதெனிய நகரில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சீ. அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
பரஹதெனிய பாடசாலை மைதானத்தில் கடந்த பெப். 10. 11 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பம்மண்ண சார்ஜா அணியை வை.எஸ்.எஸ்.சீ. அணி 06–01 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இந்த சுற்றுத் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக வை.எஸ்.எஸ்.சீ. அணியின் முஸ்தாக்கும், சிறந்த தொடர் வீரராக அதே அணியின் முன்சிபும் தெரிவாகினர்.
புத்தளம் தினகரன் நிருபர்