Sunday, April 28, 2024
Home » மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா 24 ஆம் திகதி

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா 24 ஆம் திகதி

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

by mahesh
February 14, 2024 9:02 am 0 comment

வரலாற்றுச் சிறப்பும் புராதன தொன்மையும் வாய்ந்த மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமகோற்சவம் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமாகி திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ கிரியாபானு சு.கிருஸ்ணகுமார் குருக்களினால் கொடியேற்றம் ஆரம்பமாகி பகல், இரவு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

24.02.2024 சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் தேர்த்திருவிழாவும்,26.02.2024 திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றிரவு துவஜஅவரோகணமும் (கொடியிறக்கம்) நடைபெறவிருக்கின்றது.

ஆலய பரிபாலன சபைத் தலைவர் விக்கினேஸ்வரர் சர்வானந்தா, செயலாளர் செல்லையா ஜெயராஜ், பொருளாளர் பெரியசாமி மனோகரன், ஆகியோரின் வழிநடத்துதலின் கீழ் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் தேர்திருவிழாவின் சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளனர்.

இந்த சகல புனித நிகழ்வுகளிலும் அம்பிகையடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து அம்பிகையின் அருட்கடாட்சத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலைவர் வி.சர்வானந்தா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT