Monday, April 29, 2024
Home » தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு
பொலிஸ் சிறைக்கூடத்தில்

தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு

by Gayan Abeykoon
February 1, 2024 1:00 am 0 comment

அநுராதபுரம் தலைமையக  பொலிஸ் நிலைய பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் (31)  தெரிவித்தனர். அநுராதபுரம் தெவன பியவர பகுதியை வசிப்பிடமாக கொண்ட 22 வயதுடைய எஸ்.எச். மாரம்பகே எனப்படும் இளைஞனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; அநுராதபுரம் தலைமையக பொலிஸாரால் போதைப் பொருள் வைத்திருந்த  குற்றச்சாட்டு தொடர்பில் 30ஆம் திகதி  மாலை கைது செய்யப்பட்டு பொலிஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைத்திருந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் மேலும் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞனது திடீர் மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT