Home » நீர்கொழும்பு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி

நீர்கொழும்பு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி

by mahesh
January 28, 2024 6:09 am 0 comment

எக்ஸ்டமினேற்றர் பீ.எல்.சி. நிறுவனம் நீர்கொழும்பு கடற்கரையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.

நமது இயற்கை சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, நமது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ள எக்ஸ்டமினேற்றர் பீ.எல்.சி.நிறுவனம் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த அயராது உழைத்து, இந்த பிரபலமான கடற்கரையின் அழகை அனைவரும் ரசிக்கும் வகையில் பராமரிக்க உதவியுள்ளது.

நமது வீடு, வாசல் போன்றே பொது இடங்களும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் காணப்படல் வேண்டும்.பூனைக்கு மணி யார் கட்டுவது போலன்றி கூட்டு நடவடிக்கையின் பயனாக நமது கடற்கரைகளைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சிகளில் எங்களுடன் சேர மற்றவர்களை ஊக்குவிக்கிறோம்.

நம் பெருங்கடல்கள் மற்றும் கடற்கரையோரங்களைச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் நாம் அனைவரும் இணைந்து உண்மையான மாற்றத்தை தலைமுறை தலைமுறையாக உருவாக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT