யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற ரீ-சேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களுக்கு (0772690673, 0776523229) அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்