சுமார் 03 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயது வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவரென குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை (13) இரவு புத்தளம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்த இரகசியத் தகவலுக்கமைய, இவர் கைது செய்யப்பட்டார் .
இந்நபர் கற்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்றில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்று, பாலாவியிப் பகுதியில் இறங்கி மற்றொரு பஸ்ஸொன்றில் எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் பயணித்த பஸ்ஸை குறிஞ்சிப்பிட்டி பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன்போது சூட்சமமான முறையில் மறைத்து வைத்திருந்த 03 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொதிகளை பொலிஸார் கைப்பற்றினர். இதன் பெறுமதி 03 கோடி ரூபாவிற்கும் அதிகமென அதிகாரிகள் தெரிவித்தனர்.