அமைதி, நல்லிணக்கம், செழுமைக்கான எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளை எமக்கு அளிக்கும் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, புதிய இலக்குகள், அடைவுகள், மற்றும் புதிய உத்வேகங்களையும் கொண்டு வரட்டும் என்று இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் நிமித்தம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர், புத்தாண்டின் நிமித்தம் இலங்கை மக்களாகிய உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்காலம் சிறந்ததாக அமைய வேண்டும், பிறந்துள்ள புத்தாண்டு கடந்த ஆண்டுகளை விடவும் செழிப்பானதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
2024 புத்தாண்டின் வருகையானது அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழுமைக்கான எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளை எமக்கு அளிக்கிறது. இரு நட்பு நாடுகளின் மக்களுக்கும் முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு ஆண்டாக இவ்வாண்டு அமைய வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.