Home » கிளிநொச்சி நகரில் இன்று ‘மலையகம் 200’ நிகழ்வு

கிளிநொச்சி நகரில் இன்று ‘மலையகம் 200’ நிகழ்வு

by sachintha
December 30, 2023 6:15 am 0 comment

அசானி, கில்மிஷாவுக்கும் பாராட்டு

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்ததை நினைவுகூரும் வகையில் ‘மலையகம் 200’ நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று (30) முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுகிறது.

இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக சமூகத்தினர் ஆகியோர் கலந்துகொள்வதாக, மேற்படி நிகழ்வு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களான பரமநாதன் குமாரசிங்கம், சுப்பிரமணியம் மோகனராசா தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது, தென்னிந்திய தனியார் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் சரி கம ப இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கில்மிஷா மற்றும் அப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடிய அசானி ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்படுவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT