157
இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்துடன் இன்று (12) தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
கலந்துரையாடலின் பின்னர் இரண்டாவது தவணை நிதியினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.கடனை மீளச் செலுத்தும் இலங்கையின் செயற்பாடுகளில் கடன் வழங்கும் நாடுகள் வெளியிட்ட நம்பிக்கையின் அடிப்படையிலேயே, இரண்டாம் கட்ட நிதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.