188
பேருவளை மரக்கலாவத்த பகுதியில் சுமார் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ நிலையத்துடன் இணைந்த பல்துறை கட்டிடம் நேற்று (07) மக்கள் பாவனைக்காக சீனன்கோட்டை பள்ளிச்சங்கத் தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியார் மற்றும் பேருவளை பிரதேச செயலாளர் ரஞ்சன் பிரியசாந்த ஆகியோரினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸாகிரீன் பள்ளிவாசல் நிர்வாகிகள், சீனன்கோட்டை பள்ளிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சமூகசேவையாளர் அல்-ஹாஜ் எம்.ஐ.எம். பாக்கீர் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இவ் மருத்துவ நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.