யாழ். மாவட்டத்தில் இவ்வருடத்தின் இறுதி வரையான காலப்பகுதியில் டெங்கு தாக்கத்தால் 2203 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன.
இதனை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலைக்குப் பின்னர் நவம்பர் மாத இறுதி வாரத்திலிருந்து டெங்கு நோயின் பரம்பல் சடுதியாக அதிகரித்து செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதன்படி, யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதி வரையான காலப்பகுதியில் 2203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பருத்திதுறை விசேட நிருபர்)