Saturday, April 27, 2024
Home » தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கம்

by damith
December 4, 2023 11:03 am 0 comment

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித் துறையுடன் இணைந்து ஆய்வரங்கை நடத்தியது.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கியச் செல்நெறி” எனும் தலைப்பில் இந்நிகழ்வு (02) இடம்பெற்றது.தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரபீட கேட்போர் கூடத்தில் நடந்த இந்நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமை தாங்கினார்.

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஆய்வரங்கத் தலைமை வகித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT