கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளில் திடீர் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை, கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்சார விநியோக பிரச்சினை காரணமாக நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சபை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அது தொடர்பான திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.