Sunday, April 28, 2024
Home » தினகரன் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு
ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலய நிகழ்வில்

தினகரன் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

by sachintha
November 23, 2023 9:12 am 0 comment

பாணந்துறை, ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் போதைபொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மாணவர்களின் விசேட நிகழ்வுகள் இன்று (23) பாடசாலையில் காலை 9.00 மணிமுதல் நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் எஸ்.எச். முத்தலிப் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இன்றைய நிகழ்வில் பாடசாலையின் ஊடக கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த தினகரன் பிராந்திய ஊடகவியலாளர்களான கலாபூஷணம் எம்.கே.எம். அஸ்வர், அஷ்ரப் ஏ சமத் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
இவ்வைபவத்தில் மேல் மாகாண தமிழ் பிரிவு பாடசாலைகளுக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். நஜீப் பிரதம அதிதியாகவும் விசேட அதிதியாக பாணந்துறை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.எம். சமந்த வேதகே, கெளரவ அதிதிகளாக களுத்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஜெயகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.இல்யாஸ், தொழில் அதிபர் ஷியாம் நளீம், மெக்சன் நிறுவன (செயல்பாட்டு ) முகாமையாளர் எம்.என்.எம்.இஸ்திஹார் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT