1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் ராஜா ஜுவல்லர்ஸ், கிரிபத்கொடையில் தனது நான்காவது காட்சியறையை வெற்றிகரமாகத் திறந்து வைத்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. நேர்த்தி மற்றும் அதிநவீனத்தின் மீது நாட்டம் கொண்டவர்களுக்காக, சர்வதேச அளவில் கவர்ச்சி மிக்க, பல்வேறு தனித்துவமான வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தும் அது, அனைத்து நகைகளையும் போட்டி விலையில் வழங்குகின்றது.
95 ஆண்டுகால புகழ் மிக்க வரலாற்றைக் கொண்ட ராஜா ஜுவலர்ஸ், இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நகை வர்த்தக நாமம் எனும் பெயரைக் கொண்டுள்ளது. மிகக் கோலாகலமாக கிரிபத்கொடை காட்சியறை திறக்கப்பட்டது.
ராஜா ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அத்துல எலியபுர, புதிய கிரிபத்கொடை காட்சியறை திறப்பு தொடர்பான தனது கருத்துகளை வெளியிடுகையில், “எமது புதிய காட்சியறையானது, உயர்தர கைவினைத்திறனை வழங்குவதற்கும், வாடிக்கையாளர்களின் திருப்தியை உறுதி செய்வதற்குமான எமது நிலையான அர்ப்பணிப்பின் ஒரு பிரதிபலிப்பாகும்.