134
நாட்டில் அதிகரித்து வரும் மழை வீழ்ச்சியால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தானாகவே திறந்துகொண்டதாக நீர்த்தேக்க பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 722 மில்லியன் கனமீட்டரை எட்டியதையடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 159 கனமீட்டர் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த ஆண்டு அணுமின் வான் கதவுகள் திறக்கப்படுவது இதுவே முதல் முறையென அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக தாழ் நில பிரதேசங்களில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பொறியாளர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.