89
ஹிங்குராக்கொட விமானப்படைத்தளத்தினால் மேற்கொள்ளப்படும் சமூக சேவை பணிகளில் ஒன்றாக பொலன்னறுவை ஆனந்தா மகளிர் கல்லூரியின் 71 வருட பழமைவாய்ந்த ‘சுகலா தேவி’ மண்டபம் புதுப்பித்தல் மற்றும் நிர்வாக கட்டடமாக புதுப்பிக்கப்பட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் பாடசாலையின் பாவனைக்காக அண்மையில் கையளிக்கப்பட்டது. விமானப்படை தளபதியின் பணிப்புரைக்கு இணங்க ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் குணவர்தனவின் மேற்பார்வையின் கீழ் 10 வாரங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றபட்டமை விசேட அம்சமாகும்.