Friday, May 10, 2024
Home » பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வழங்கும் வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வழங்கும் வேலைத்திட்டம்

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

‘மாணவர் மகிமை’ வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் 21 வது வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ.எம் நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை, நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம், நிந்தவூர் அல் மினா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாதணிகள் பாடசாலை அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்களான ஏ.அப்துல் கபூர், ஏ.சி ஹாமிது, எம்.எச் றாபிஉ, நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவ பாராளுமன்றத்தின் சமுதாய தொடர்பு விருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எப்.அப்துல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(துறைநீலாவணை, பாண்டிருப்பு தினகரன் நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT