Saturday, April 27, 2024
Home » ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

ல்விப் பணியில் 32 வருட காலம் சேவையாற்றிய காரைதீவைச் சேர்ந்த ஆசிரியர் தம்பியப்பா நடேசலிங்கம் தனது 60ஆவது வயதில் நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றார்.

அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் 20 வருட காலம் ஆசிரியராக, பிரதி அதிபராக பணியாற்றினார்.

அவருக்கான பிரியாவிடை வைபவம் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் அதிபர் ச.ரகுநாதன் தலைமையில் நேற்றுமுன்தினம் சிறப்பாக நடைபெற்றது. அவர் 1990இல் தலவாக்கலை சென்கூம்ஸ் வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மாளிகைக்காடு சபீனா வித்தியாலயம், காரைதீவு பெண்கள் பாடசாலை ஆகியவற்றில் சிறப்பாக சேவையாற்றினார். இவர் அவுஸ்திரேலியா ஒஸ்கார் நிறுவனம் மற்றும் சிட்னி உதயசூரியன் கல்வி மேம்பாட்டு நிலையம் என்பவற்றின் உடாக பல உதவிகளை இப்பிரதேசத்துக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும் காரைதீவு விபுலானந்தா பணி மன்ற நிர்வாக சபை உறுப்பினராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.

( காரைதீவு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT