தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இருதயபுரம் நீர் வழங்கல் காரியாலய அணி சம்பியனானது. கடந்த சனிக்கிழமை (11) களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் பிராந்திய முகாமையாளர் எம்.குமாரதாஸ் தலைமையில் நடைபெற்ற இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் இருதயபுரம் மற்றும் செங்கலடி காரியாலய அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இருதயபுரம் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 61 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய செங்கலடி அணி 5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஐந்து ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்சம்பியனானது இருதயபுரம் அணி
184
previous post