கீரி சம்பாவுக்கு நாட்டில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும், மாபியாக்களே, கீரி சம்பாவுக்கு செயற்கையான தட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீர தெரிவித்துள்ளார். இதுபற்றி விளக்கிய அமைச்சர்: போதுமான அளவில் கீரி சம்பா கையிருப்பில் உள்ளது.
இந்நிலையில், அரிசி ஆலை உரிமையாளர்களே இதை, சந்தைக்கு விடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.இதனாலே,கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
கடந்த சிறு போகத்தில் கீரிசம்பா அறுவடை குறைந்திருந்தது. இருந்தபோதும், இதற்கு முன்னர் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவடையில், பெருமளவு கீரி சம்பா கிடைத்துள்ளது.
இவை,போதுமானளவு தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்