Sunday, April 28, 2024
Home » 23 கோடி ரூபா கொக்கெய்னுடன் வெளிநாட்டு பெண் அதிரடி கைது

23 கோடி ரூபா கொக்கெய்னுடன் வெளிநாட்டு பெண் அதிரடி கைது

விமான நிலைய சுங்க பிரிவினரிடம் சிக்கினார்

by damith
October 24, 2023 7:10 am 0 comment

கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன் பெறுமதி சுமார் 23 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை,42 வயதுடைய இந்தோனேசிய பெண்ணொருவரே நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இப்பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து கட்டாரூடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைகளுக்கு இடையில் நுட்பமான முறையில் மறைத்து வைத்து 4,598 கிராம் கொக்கைன் போதைப்பொருளை இவர் கொண்டு வந்துள்ளார் .

நேற்று முன்தினம் மதியம் 04.10 மணியளவில் QR 654 என்ற Qatar Airways விமானத்தில், இவர் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT