Saturday, April 27, 2024
Home » ரூபா 14 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் விமான நிலையத்தில் சிக்கின

ரூபா 14 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் விமான நிலையத்தில் சிக்கின

- ஒருவர் கைதாகி பிணையில் விடுவிப்பு

by Rizwan Segu Mohideen
October 20, 2023 6:39 am 0 comment

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 14 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வந்தவர்,நேற்று (19) காலை கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர்.

அடிக்கடி விமானங்கள் மூலம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்நபர், நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயது நபர் என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 72 அதி உயர் சிகரெட் கார்டூன்கள் அவரது சில பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

வர்த்தகர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் (25) இந்த சட்டவிரோத சிகரெட் கையிருப்புடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT