பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றில் யெமனுக்கு எதிரான இரண்டாவது கட்ட போட்டியை இலங்கை கால்பந்து அணி 1–1 என சமநிலை செய்தது.
சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நடந்த முதல் கட்டப் போட்டியில் 0–3 என தோல்வியை சந்தித்த இலங்கை அணி நேற்று முன்தினம் (17) கொழும்பு, குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது கட்டப் போட்டியில் சிறப்பாக செயற்பட்டது.
போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே யெமன் அணி கோல் பெற்றபோதும் இலங்கை வீரர்கள் எதிரணிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். இதன்மூலம் 89 ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் சரித்த ரத்னாயக்க பதில் கோல் புகுத்தி போட்டியை சமன் செய்தார்.
எனினும் இரண்டு கட்டப் போட்டிகளிலும் 4–1 கோல்களால் முன்னிலை பெற்ற யெமன் அணி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது.