காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது மற்றும் அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கு அழைப்பு விடுக்கும் ரஷ்யா முன்மொழிந்த தீர்மானம் பாதுகாப்புச் சபையில் தோல்வி அடைந்துள்ளது.
நேற்று முன்தினம் (16) கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தில் ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை கண்டிக்கத் தவறி இருப்பதாக அதற்கு எதிராக வாக்களித்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், கபோன் மற்றும் மொசம்பிக் நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததோடு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகள் எதிராக வாக்களித்தன.
15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் பிரேசில், மோல்டா, அல்பேனியா, சுவிட்சர்லாந்து, ஈக்வடோர் மற்றும் கானா நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.