Monday, April 29, 2024
Home » தோட்ட நிர்வாக அடக்குமுறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அவசியம்

தோட்ட நிர்வாக அடக்குமுறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அவசியம்

by gayan
October 5, 2023 7:40 am 0 comment

நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிநபரும் 47 இலட்சம் ரூபா கடனாளியாகவுள்ளனர். சாதாரண மக்கள் இவ்வாறு கடனாளியாவதற்கு ஊழல் மோசடியே காரணம். அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், தோட்டங்களில் தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள்

எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தோட்டங்களில் தோட்ட நிர்வாகத்தினர் பல்வேறு அடக்கு முறைகளை தோட்ட மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால், நீதி அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய வரி கட்டணங்கள் சரியான முறையில் அறவிடப்படுவதில்லை. அரச நிர்வாகத்துறையினர் முறையாக செயற்படத் தவறி இருப்பதே இதற்கு காரணமாகும். வரி அறவிடும் நடவடிக்கைகளில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாலே முறையாக வரி கிடைக்காமல் போகிறது. வரி வருமானம் குறையும்போது அத்தியாவசிய பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதால் சாதாரண பொது மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT