270
திருகோணமலை நகர பகுதியிலுள்ள சில்லறை கடையொன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பெரும் சேதம் எற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
திருகோணமலை-பிரதான வீதியிலுள்ள கே.எம்.டி.வீரசிங்க என்பவருக்கு சொந்தமான சில்லறை கடையே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு பிரிவினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் மின்சார ஒழுக்கு காரணமாகவே தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
(ரொட்டவெவ குறூப் நிருபர் )