யாழ்ப்பாணம், வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தின் 175ஆவது ஆண்டு நிறைவு விழா, பாடசாலை அதிபர் க.கலியுகன் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (25) நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளரும் ஆறுமுக நாவலர் தர்மகர்த்தாசபை தலைவருமான பொ.ரவிச்சந்திரன் கலந்துகொள்ளவுள்ளதுடன், சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் கலந்துகொள்ளவுள்ளார்.
விழாவின் ஆரம்பத்தில் பாடசாலையில் அமைந்துள்ள நாவலர் திருவுருவச்சிலைக்கு வணக்கம் செலுத்தப்பட்டதுடன், நால்வர் திருக்கோவிலில் வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும், விழாவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.சிவநேசன், நாவலர் தர்மகர்த்தா சபையினர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.