326
பாணின் விலையை குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவிக்கையில், 450 கிராம் பாணின் விலையை விரைவில் 100 ரூபா வரை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வகையில் பாண் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் வரிகள் குறைக்கப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவில் எடுக்குமானால் 450 கிராம் பாணின் விலையை 100 ரூபா வரை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)