இலங்கை ஸ்ரீ ஜெய் ப்ரத்யங்கிரா குருபீடம் குறைந்த வருமானம் பெறும் 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை மற்றும் 100 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எஸ். விநாயகர் குருக்கள் தலைமையில் அண்மையில் கொழும்பு பொரளை YMBA கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள், குரு பீட உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
ருஸைக் பாரூக்