இலங்கையின் சகலவித முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை உதவுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உறுதியளித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே, ஜனாதிபதியிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் இந்த உறுதிப்பாட்டை வௌிப்படுத்தினார்.
இதன்போது, பொருளாதார நிலைமை உட்பட உள்நாட்டு பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் இருவரும் விரிவாக கலந்துரையாடினர்.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஐ.நா.வின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதுடன், சிறந்த சர்வதேச நிதி கட்டமைப்புக்கும் ஆதரவு வழங்குவதாகவும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.