Friday, May 10, 2024
Home » துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி; 2 பேர் காயம்

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி; 2 பேர் காயம்

by Prashahini
September 21, 2023 10:04 am 0 comment

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ குருபஸ்கொட வளைவுக்கு அருகில் நேற்று (20) இரவு முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டதாக 119 நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் காயமடைந்து, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 27 வயது மற்றும் 36 வயதுடைய தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவிசாவளையில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை மோதியுள்ளனர். பின்னர் T56 ரக துப்பாக்கி மூலம் சுட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT