Thursday, May 9, 2024
Home » தற்போது விமான நிலையத்தில் உள்ள பிரத்தியேக மையத்திலிருந்து Uber சவாரி

தற்போது விமான நிலையத்தில் உள்ள பிரத்தியேக மையத்திலிருந்து Uber சவாரி

by Rizwan Segu Mohideen
September 11, 2023 11:17 am 0 comment

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சவாரியாளர்கள் வாகனங்களில் ஏறுவதற்கான பிரத்தியேகமான இடத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக Uber இன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் இப்போது இந்த விசேடமாக நியமிக்கப்பட்ட இடப் பகுதியில் தமது Uber சவாரியை எளிதாகக் கண்டுபிடித்து, பயணம் தொடர்பான மன அழுத்தம் மற்றும் யூகங்களை இனிமேலும் முகங்கொடுக்க தேவையற்ற ஒரு விடயமாக மாற்றிக்கொள்ள முடியும். இது இலங்கையில் தொழில்துறையில் இந்த வகையில் முதன்முதலாக அறிமுகமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள் வருகை முனையத்தில் அமைந்துள்ள Uber வாகனங்களில் ஏறிக்கொள்ளும் இடத்தில், Uber இன் பயணிகள் வரவேற்பு பற்றிய உரிய தகவல் விபரங்களுக்கு பயணிகள் இப்போது சேவை மையங்களை அணுகலாம். நியமிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் பண வடிவமில்லா பரிவர்த்தனைகள் மூலம் ஓட்டுநர்கள் பயனடைவார்கள். ஓட்டுநர் கூட்டாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் Uber வாகனங்களில் ஏறிக்கொள்வதற்கான பயணிகளுக்கான தெளிவான வழி கண்டறியும் அடையாளங்களுடன், இந்த விமான நிலைய கூட்டாண்மை விமான நிலைய பயணத்திற்கான தரத்தை மேம்படுத்தும் மற்றும் சவாரியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும். விமான நிலையத்தில் Uber பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு சவாரியிலிருந்தும் ரூபா 700 மற்றும் பொருந்தக்கூடிய பெறுமதி சேர் வரியை (VAT) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் சம்பாதிக்கும் என்பதுடன், இது செயலி (app) அடிப்படையிலான திரட்டிகளின் மூலமாக வருமானத்தை அதிகரிக்கும்.

உலகளவில், சௌகரியம் மற்றும் கட்டுபடியில் விமான நிலைய அனுபவத்தை Uber சிறப்பாக மாற்றியுள்ளது. இந்நிறுவனம் 600 க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்களுடன் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளதுடன் மற்றும் வாடிக்கையாளர்கள் Uber ஐத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முறையும் சிறந்த அனுபவத்தையும் பாதுகாப்பையும் வழங்க உள்ளூர் விமான நிலைய அதிகார சபைகளுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படும் பிரத்தியேக விமான நிலைய சேவை அணியையும் கொண்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துடனான கூட்டாண்மையானது இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக மேலும் பலதரப்பட்ட பயணிகள் மத்தியில் ஊக்குவிப்பதுடன், மற்றும் விமான நிலையத்திலிருந்து தங்குதடையின்றி பயணிக்க தங்களுக்கு பரிச்சயமான Uber செயலியைப் பயன்படுத்த அவர்களுக்கு இடமளிக்கும்.

Uber இந்தியா மற்றும் தெற்காசியாவின் செயற்பாடுகளுக்கான பணிப்பாளரான ஷிவா சைலேந்திரன் அவர்கள் கூறுகையில், “Uber இன் சிறந்த வரப்பிரசாதங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நாம் எப்போதும் உழைத்து வருகிறோம். கொழும்பு விமான நிலையத்தில் வாகனங்களில் ஏறிக்கொள்வதற்கான ஒரு பிரத்தியேக இடத்தைச் சேர்ப்பது, விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு நம்பகமான, அடையாளம் காணக்கூடிய மற்றும் தங்குதடையற்ற போக்குவரத்து வழிமுறையை வழங்குவதற்கும், இலங்கையை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும் உதவும். இலங்கையில் எமது வலுவான சவாரியாளர்கள் தளத்திற்கு கூடுதலாக, 70 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் Uber ஐ நன்கு அறிந்துள்ளதுடன், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது அதை அவர்கள் தாம் விரும்பும் தெரிவாகக் கொண்டுள்ளனர். சர்வதேசப் பயணிகளும், தாய்நாட்டிற்குத் திரும்பும் இலங்கையர்களும், வாகனங்களில் ஏறிக்கொள்வதற்கான இந்த பிரத்தியேக இடத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பதுடன், அவர்கள் எம்முடன் சவாரி செய்யும் ஒவ்வொரு முறையும் உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தைப் பெறுவார்கள் என்றும் நாம் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

பயணிகள் விமான நிலையத்தில் உள்ள Uber சேவைகளின் பரந்த வகையில் இருந்து தெரிவு செய்யலாம் என்பதுடன், உயர்தர வாகனங்களுடன் சிறந்த தரமதிப்பீடு பெற்ற ஓட்டுநர்களின் சேவைகளைப் பெறலாம். அவர்களின் தேவை, சவாரி செய்யும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எடுத்துச் செல்லும் பயணப் பொதிகளைப் பொறுத்து, அவர்கள் செயலியின் மூலமாக Zip, Premier அல்லது XL வாகனங்களிடையே வேண்டியதை தெரிவு செய்யலாம். Uber Rentals மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பயணிகளை இறக்கி விடுவது, பல மணி நேரம் நீடிக்கும் சவாரிகள் போன்றவற்றை முன்பதிவு செய்வதற்கான தெரிவும் அவர்களுக்கு உள்ளது.

இப்போது, விமான நிலையத்திலிருந்து ஒரு பெரிய குழுவாக பயணம் செய்பவர்களுக்காக வேன்களையும் Uber சேர்த்துள்ளது. கட்டுபடியான மற்றும் எளிதாகக் கண்டறியக்கூடிய, இந்த சமீபத்திய சலுகையானது குழுவாக பயணங்களை மேற்கொள்பவர்களின் தேவைகளை எளிதாக்கும். ஒவ்வொரு Uber வானிலும் 10 பேர் வரை பயணப் பொதிகளுடன் பிரயாணம் செய்யலாம் என்பதுடன், நீண்ட தூர பயணங்கள் மற்றும் குழுவாக ஒன்றாகப் பயணம் செய்வதற்கு இது சிறந்த தெரிவாக இருக்கும். Uber செயலியில் கிடைக்கும் தெரிவுகளுக்கேற்ப, சவாரியாளர்கள் Toyota Hiace, Caravan போன்ற வாகனங்களைப் பெறுவார்கள்.

வெளிப்படைத்தன்மைக்கான Uber இன் உறுதிப்பாட்டிற்கு இணங்க, பயணிகள் முன்பதிவு செய்யும் போது முன்கூட்டியே தீர்மானிக்கப்படும் கட்டணத்தில் இருந்து தொடர்ந்து பயனடைவார்கள். மேலும், தேவைப்பட்டால் இப்போது சேவை மையங்களில் முன்பதிவுக்கான உதவியைப் பெறுவார்கள். முன்கூட்டியே காண்பிக்கப்படும் மதிப்பிடப்பட்ட கட்டணத்தில் விமான நிலைய வாகன தரிப்பிட கட்டணம் மற்றும் விமான நிலையத்திலிருந்து செல்லும் அதிவேக நெடுஞ்சாலை கட்டணம் ஆகியவை அடங்கும் என்பதால், இது சவாரியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இடையேயான வீண் விவாதங்களைக் குறைத்து, தங்குதடையற்ற பயணத்திற்கு இடமளிக்கும். Uber இன் 24ஃ7 பாதுகாப்பு உதவு சேவையிலிருந்து பயணிகள் கட்டணங்களின் பூரண விபரங்களைப் பெற்று பயனடைய முடியும்.

Uber தொடர்பான விபரங்கள்
பிரயாணத்தின் மூலம் வாய்ப்பைத் தோற்றுவிப்பதே Uber இன் நோக்கம். ஒரு பொத்தானைத் தொடுவதால் நீங்கள் எவ்வாறு பிரயாணத்தை மேற்கொள்ளலாம்? என்ற கேள்விக்கு ஒரு எளிய தீர்வுடன் 2010 ஆம் ஆண்டில் நாங்கள் செயற்பட ஆரம்பித்தோம். 25 பில்லியனுக்கும் அதிகமான பயணங்களுக்குப் பிறகு, மக்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு இட்டுச்செல்ல தீர்வுத்திட்டங்களைக் கட்டியெழுப்பி வருகிறோம். நகரங்கள் வழியாக மக்கள் செல்வது, உணவு மற்றும் விடயங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை மாற்றுவதன் மூலம், புதிய வாய்ப்புக்களுக்கான உலகிற்கு வழிகோலும் ஒரு தளமே Uber ஆகும். 2015 இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, Uber Rides இலங்கையில் 40 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்துள்ளதுடன் மற்றும் பல தயாரிப்புகளைச் சேர்ப்பதன் மூலம் இயங்குதள அனுபவத்தையும் மேம்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT