Friday, May 10, 2024
Home » உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் பலி

உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் பலி

by Prashahini
August 2, 2023 11:03 am 0 comment

உழவு இயந்திரம் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி தடம்புரண்டதில் இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (1)  இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

உழவு இயந்திரத்தினை திருத்தப்பணிக்காக கொக்குளாயிலிருந்து கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள திருத்தகத்திற்கு கொண்டு சென்று விட்டு, மீண்டும் கொக்குளாய் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த போது கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் கொழும்பை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 42 மற்றும் 27 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரும் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓமந்தை விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT