Monday, May 20, 2024
Home » சீன முதலீடுகளுக்கு இந்தியாவில் இடம்

சீன முதலீடுகளுக்கு இந்தியாவில் இடம்

by sachintha
August 2, 2023 11:19 am 0 comment

சீனாவின் முதலீடுகளுக்காக இந்தியா திறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“சீனர்கள் உட்பட அனைத்து முதலீட்டாளர்களுக்காகவும் இந்தியா திறந்திருப்பதாகத் தெரிவித்துள்ள இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் ரஜீவ் சந்திரசேகர், எந்தவொரு நிறுவனத்துடனும் வர்த்தகம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், அவர்கள் தங்கள் முதலீடுகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் சட்டபூர்வமாகவும், எமது நாட்டு சட்டங்களுக்கு அமைவாகவும் மேற்கொள்ளும் போது அதற்கு நாம் இடமளிப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 2020 இல் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் உருவாகின. இந்த முறுகல்களுக்கு தீர்வு காணும் வகையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT