Monday, May 20, 2024
Home » யானை தாக்கி ஒருவர் படுகாயம்

யானை தாக்கி ஒருவர் படுகாயம்

by Prashahini
August 2, 2023 11:34 am 0 comment

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி அகஸ்தியஸ்தாபனம் பகுதியில் நேற்று (01) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சிவசம்பு என தெரியவருகின்றது.

குறித்த நபர் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கங்குவேலி – படுகாட்டுப் பகுதியில் மேற்கொண்டுவரும் வயலுக்கு இரவுநேர யானை காவலுக்காக சென்றிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ -கோமரங்கடவல பகுதிகளில் இதுவரை ஒரு வருடத்திற்குள் ஆறு பேர் யானை தாக்குதலால்உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

ரொட்டவெவ குறூப் நிருபர் – அப்துல்சலாம் யாசீம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT