Thursday, May 9, 2024
Home » மனைவியுடனான தகராறில் கணவன் தற்கொலை

மனைவியுடனான தகராறில் கணவன் தற்கொலை

by Prashahini
August 2, 2023 11:58 am 0 comment

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் கணவர் ஒருவர் இன்று (2) விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய நகர ஹோட்டல் ஒன்றில் விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே இவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் சூரியவெவை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு விஷமருந்தி உள்ளமை தெரிய வந்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

 

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT