முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வு பிரவில் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான இ.போ.ச. பஸ்களின் மூலம் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையிலான விசாரணைகளுக்க அமைய, அவர் சி.ஐ.டி. இற்கு வரவழைக்கப்பட்டார்.
இன்று (14) பிற்பகல் 2.00 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரவில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து சிஐடி வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment