Tuesday, April 30, 2024
Home » வீதியில் நெல் காய வைத்தவர் விபத்தில் பலி

வீதியில் நெல் காய வைத்தவர் விபத்தில் பலி

by Rizwan Segu Mohideen
February 11, 2024 8:11 pm 0 comment

யாழ்ப்பாணத்தில் வீதியில் நெல் காய வைத்துக் கொண்டிருத்தவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி விபத்துக்குள்ளானதில் நெல்லை பரப்பிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மந்திகையை அண்மித்த பகுதியில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , மோட்டார் சைக்கிள் ஓட்டி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT