மன்னாரில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில், துருக்கிசிட்டி பகுதியில் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது நேற்று (10) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  துருக்கிசிட்டி பகுதிக்கு சென்ற பொலிஸார், 7 கிலோ 815 கிராம் கேரள கஞ்சாப் பொதிகளுடன் 29 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணையின் பின்னர், சந்தேகநபர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப்  நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)


Add new comment

Or log in with...