Wednesday, November 11, 2020 - 1:14pm
யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 105 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (11) காலை, மாதகல் கடற்பரப்பில் வைத்து படகொன்றில் வைத்து குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் பயணித்த மீனவர்கள், தப்பித்துள்ள நிலையில், படகின் உரிமையாளர் கடற்படையினரால் தேடப்படுகின்றார்.
படகுடன் மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என, கடற்படையினர் தெரிவித்தனர்
(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
Add new comment