யாழ்ப்பாணம், ஆழியவளை கடற்பரப்பில் 200 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை, உடுத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை டோரா பிரிவினரால் இன்று (05) அதிகாலை 2.00 மணியளவில் ஆழியவளை கடற்பரப்பில் இருந்து ஆறு கிலோ மீற்றர் எல்லைக்குள் வைத்து இம்மீனவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து, சுமார் 20 இற்கும் மேற்பட்ட பொதிகளாக செய்யப்பட்ட 200 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் பளை பொலிசாரிடம், கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
Add new comment