151
அம்பாறை பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை அவதானிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன அம்பாரைக்குச் சென்றிருந்தார். அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. வீரசிங்கவின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற அமைச்சர் பாதிப்புக்களை பார் வையிட்டதுடன் புனரமைப்பு பணிகளுக்கும் உத்தரவிட்டார்.இங்கு பேசிய அமைச்சர்;
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விசேட புனர்வாழ்வு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.