யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளராக கடமையாற்றிய இளைஞரொருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்று (28) உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26 வயதான கஜந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அலுவகத்தில் பணியிலிருந்தவேளை , தண்ணீர் வராததால் , தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக சென்ற வேளை, அங்கிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட சேதம் காரணமாக மின்சாரம் தாக்கியுள்ளது.
அதனை அடுத்து அலுவகத்தில் கடமையில் இருந்த ஏனையவர்கள் இளைஞனை மீட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.விசேட நிருபர்