மலேசிய பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததற்கான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கெப்பொங் பாராளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலேசியாவின் ஜின்ஜாங் மத்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 வயது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்த விசாரணை களை கோரியுள்ள பாராளுமன்ற உறுப்பினர், விசாரணைகளை மேற்கொள்வதற்கு சகல தரப்பினரும் காலஅவகாசம் வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். பொலிஸாரின் தடுப்புக்காவலிலிருந்த வேளையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்,தீவிரமாக ஆராய்ந்து, உடற்கூற்று பரிசோதனையுடன் சிசிடிவியை தீவிரமாக ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சிறைச்சாலையில் சிசிடிவி இல்லாவிட்டால் அதற்கான விளக்கத்தை பொலிஸார் அளிக்கவேண்டுமெனவும் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். உயிரிழந்தவர் மலேசியாவில் மூன்று பேர் உயிரிழந்தமை தொடர்பில் கடந்த (22) மனைவியுடன் கைதான இந்நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.இவர்களின் தடுப்புக்காவல் (05) வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்நபர் 30 இல்,உயிரிழந்தார். இதேவேளை, மலேசியாவில்இடம்பெற்ற கொலை தொடர்பில் மேலும் ஏழுபேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்-