தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 19 ஆவது ஆண்டு நிறைவும், வருடாந்த ஒன்றுகூடலுடன் புதிய நிருவாகத் தெரிவும் கடந்த 30 ஆம் திகதி இரவு (30.09.2023) அட்டாளைச்சேனை யாடோ ஹோட்டலில் நடைபெற்றன.
நுஜா ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த ஒன்றுகூடலின்போது கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பலவிடயங்கள் பற்றியும், ஒன்றியத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது.
இங்கு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகருமான பன்னூலாசிரியர் எஸ்.எல்.மன்சூர் மற்றும் இளம் ஊடகவியலாளரும் தொழிலதிபருமான ஏ.ஆர்.முனாஸ் ஆகியோர் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப், சமகால நாட்டு நடப்புகள் குறித்தும் முஸ்லிம் அரசியலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் குறித்தும் நீண்ட உரையொன்றை இங்கு நிகழ்த்தினார்.
இங்கு 2023/2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையின் தலைவராக- எஸ்.எம்.அறூஸ் தெரிவானார். பிரதித் தலைவர்களாக எஸ்.எல்.மன்சூர், எம்.எச்.முஸ்தாக் முகம்மட் ஆகியோரும் செயலாளராக – பைசல் இஸ்மாயிலும் தெரிவாகினர்.
பிரதிச் செயலாளராக ஏ.எல்.கியாஸ்தீன், பொருளாளராக ஜூல்பிகா செரீப், உதவிப் பொருளாளராக எம்.ஐ.சியாத், தவிசாளராக ஏ.எல்.றமீஸ், பிரதித் தவிசாளராக எம்.ஏ.தாஜஹான், தேசிய அமைப்பாளராக எம்.ஐ.எம்.றியாஸ், பிரதித் தேசிய அமைப்பாளராக ஏ.எம்.ரபீக், தேசிய ஒருங்கிணைப்பாளராக எம்.ஜே.எம்.அஸ்ஹர், பிரதித் தேசிய ஒருங்கிணைப்பாளராக பீ.எம்.றியாத்,
நிர்வாக குழு உறுப்பினர்களாக எஸ்.சீனிஸ்கான், யு.எல்.சிப்லியா, ஐ.எம்.ஹம்தான், என்.எம்.பௌசர், எம்.எல்.எம்.பாரீஸ், சித்திசபானா, எஸ்.எல்.அப்ரின், ஜீ.றுஸ்வின், எப்.அஸ்பர் சபா, டி.எம்.அறபாத், எம்.சியாம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
போசகராக பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் தெரிவானதுடன், சிரேஷ்ட ஆலோசகர்களாக எஸ்.எல்.எம். அபுபக்கர், ஐ.எல்.எம்.தாஹீர், கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜகுபர் ஆகியோரும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், பொத்துவில் மக்கள் வங்கி உத்தியோகத்தர் எம்.ஐ.நபீல், கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜௌபர், தொழிலதிபர் ஏ.ஆர்.முனாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான எம்.ஜே.எம்.அஸ்ஹர், ஏ.எல்.மர்ஜுன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
– முகம்மது றியாஸ் (ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)