Thursday, May 9, 2024
Home » பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

- பெண் ஒருவர் உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் கைது

by Rizwan Segu Mohideen
April 27, 2024 2:42 pm 0 comment

பண்டாரவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 14.5 கிலோகிராம் ஹேஷ், 941 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (26) பியகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கடுவலை, பொமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குறித்த போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில், 2.3 கிராம் ஐஸ், 5.3 கிராம் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த மேலும் இரு சந்தேகநபர்களும், 1.2 கிராம் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 31, 40 மற்றும் 39 வயதுகளுடைய கடுவல, சியம்பலாபே, அரலகங்வில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, மஹரகம – நாவின்ன பிரதேசத்தில் 8 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் தெரு மதிப்பு சுமார் ரூ. 16 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT