Tuesday, April 30, 2024
Home » மருதடியான் சப்பர வெள்ளோட்டம்

மருதடியான் சப்பர வெள்ளோட்டம்

by Prashahini
April 11, 2024 11:17 am 0 comment

யாழ்ப்பாணம் – மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

எதிர்வரும் சனிக்கிழமை (13) இரவு சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (14) தேர் திருவிழா இடம்பெறும்.

தேர் திருவிழா அன்று காலை 10.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி, வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள்வீதி உள்ள வரும் மருதடி விநாயக பெருமான் மதியம் 12.00 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்குவார்.

தொடர்ந்து தேர் உற்சவம் நடைபெற்று ,மாலை 3.00 மணிக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT