147
இந்தியாவின் தலைநகராக நாக்பூர் மாறிவிடும் என்று கமல் எந்த அடிப்படையில் சொல்கிறார் எனப் பார்க்க வேண்டும். கமல் உட்பட யார் சொன்னாலும் அவர்களின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். சுயநினைவுடன் தான் இருக்கிறாரா என கமலுக்கு மருத்துவ பரிசோதனையை செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
“இந்தியாவின் தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும்? நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இருக்கிறது என்பதால் இதைக் கூறுகிறார். ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தன் கட்சியை அடமானம் வைத்துவிட்டுப் பேசுகிறாரா எனப் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.