Saturday, April 27, 2024
Home » 40 வருட வரலாற்றில் அபிவிருத்தி லொத்தர் சபை அதிகூடிய இலாபம்

40 வருட வரலாற்றில் அபிவிருத்தி லொத்தர் சபை அதிகூடிய இலாபம்

ஜனாதிபதி நிதியத்திடம் நிதிகள் கையளிப்பு

by Gayan Abeykoon
March 29, 2024 1:00 am 0 comment

அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல், அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபை, 2022-2023 ஆம் ஆண்டில் 32 வீத இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இரு மடங்காகும்.இதன்படி, ஜனாதிபதி நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர்  சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா  03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்துக்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவை வழங்கியுள்ளது.  

அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமானம் அதிகரிக்க வழி கோலியுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான விசேட வழிகாட்டல்களை வழங்கினார்.

வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT